2024 ஜூன் முதல் டிசம்பர் முடிய வானிலை எங்கே? எப்படி?

0










2024 கோடை மழையும் தென்மேற்கு பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.

ஏப்ரல், மே கோடை வானிலை.
கோடை வெயில் வெப்பம், அனல் ஏப்ரல் இறுதியில் அதிகரிக்கும்.ஈரோடு, சேலம் முதலிடம் பிடிக்கும் நிலையில் மே முதல் வாரம் முதல் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை காஞ்சிபுரம் திருத்தணி முதலிடம் பிடிக்கும்.
ஏப்ரல் 28,29,30 தென் கடலோரம் மற்றும் தெற்கு டெல்டா பகுதிகளில் அதிகாலை, காலை நேரத்தில் மிரட்டும் மேகம், கடும் புழுக்கம் வானிலை நிலவும், மதியத்திற்குள் ஓரிரு இடங்களில் நனைக்கும் இடி மழை இருக்கலாம்.


கோடை மழை மே 3 முதல் கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி பெய்யும். அந்த இடி மழை பெறும் இடத்தில் கடும் புழுக்கம், வியர்வை கொடுத்து திடீர் இடி மின்னல் மழை காற்றுடன் சில இடங்களில் ஆலங்கட்டி ஐஸ் மழையாகவும் பெய்யும். பெய்யும் இடத்தில் கூடுதலாகவும், அருகே குறைவாகவும், அருகில் ஒதுக்கியும் பெய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மே 10 க்கு மேல் 15 க்குள்  வங்கக்கடலில் வலுவான நிகழ்வு உருவாகும் அது Remal புயலாக உருவெடுத்து இது ஒடிசா, மேற்கு வங்கம் பகுதியில் கடக்கும், நெருங்கி வந்தால் தமிழ்நாட்டிற்கு தாழ்வு மழை கிடைக்கும். இல்லாவிட்டால் வெப்பச்சலன மழை  ஆலங்கட்டி மழையாகவும் காற்றுடன் மழையாகவும் ஆங்காங்கே மாலை இரவு அதிகாலை பொழியும்.

மே பிற்பகுதி வளிமண்டல சுழற்சிகள் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் கூடுதல் பரப்பில் புழுக்கம், வியர்வைக்கு பின்னர் மாலை இரவு இடிமழை ஒதுக்கி ஒதுக்கி கொடுக்கும்.அது பிற மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே கொடுக்கும்.
நாட்டின் அனைத்து பகுதிக்கும் இந்த ஆண்டு கோடை சராசரிக்கும் கூடுதல் வெயில் வெப்பம் கொடுக்கும் அதே நேரத்தில் குறைவான பரப்பில் அதிக மழை பொழிந்து ஒதுக்குதல் இருந்து  நல்ல இடி மின்னல் மழை கிடைக்கும்.
தென்மேற்கு பருவமழை:

 மே இறுதியில் வெப்பச்சலன  கோடை மழை தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
 மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.
ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். *ஜூலை மாதம் வடக்கு கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா நல்ல மழை தெரிகிறது. கடலோரகர்நாடகா, கோவா, தெற்கு கடலோர மகாராஷ்டிரா புயல் அல்லது தாழ்வு பாதிக்கும் மழை தெரிகிறது ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,
மேட்டூர் நிலவரம்:
ஏப்ரல் 24 இல் -  20.76 TMC இருப்பு உள்ளது.
ஏப்ரல் 30இல் 20 TMC யாகவும்
மே 31 இல் 17 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும் 
ஜூன் 12:இல் 16 TMC யாகவும் குறையும்.
 12 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.
 குடிநீர் தேவை இருக்கும்
ஜூன், ஜூலை அணைகளுக்கு பெரிய நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.
டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஜூன், ஜூலை இரண்டு வலுவான நிகழ்வுகள் கரைகடக்கும் இடத்தில் அதிக மழை தரும். அது எந்த இடம் ஆய்வில் இருக்கிறது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog