மேற்கு மாவட்டங்கள் சிறப்பான கோடை இடிமழை வாய்ப்பு. உங்களுக்கு எப்படி?

0
மேற்கு மாவட்டங்கள் சிறப்பான கோடை இடிமழை வாய்ப்பு.
உங்களுக்கு எப்படி?






ஏப்ரல், மே கோடை வானிலை.

உயர் அழுத்தம் வங்கக்கடலில் நீடிக்க கடலோர மாவட்டங்கள் வழியாக
கிழக்கு தென் கிழக்கு திசை காற்றாக  உள்ளே நுழையும் காற்று
 மேற்கு, வடமேற்கு மாவட்டங்களில் வெப்ப அலை கொடுக்கிறது.
இந்த நிலையில் கேரளாவில் இடிமழை கொடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே தூறல், நனைக்கும் மழை கொடுக்கிறது.

மேற்கு மாவட்டங்களில் வெப்பம் மேலும் உயரும்..
கடலோர மாவட்டங்களில் படிப்படியாக உயரும்.
ஏப்ரல் 9 முதல் வெயிலுக்கு பின்னர் புழுக்கம் வியர்வைக்கு பின்னர் புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதியில் ஆங்காங்கே அதிகாலை காலை மழை வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 13 முதல்  கேரளா எல்லை ஓர மேற்கு தொடர்ச்சி மலையில்  ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மாலை இரவு லேசான மழை வாய்ப்பு.
ஏப்ரல் 15 முதல் மேற்கு மாவட்டங்கள், கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே இடிமழை வாய்ப்பு.
ஏப்ரல் 17,18,19 மாலை இரவு கடலோரம் உட்பட அனைத்து மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே இடிமழை நல்ல மழை வாய்ப்பு.
ஏப்ரல் 17,18,19 மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே கொடுக்கும் மழை தமிழ்நாடு,ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்  உப்பட தென் மாநிலங்களில் சற்று கூடுதல் பரப்பில் கொடுக்கும் வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 முடிய சூரியனின் குத்துக்கதிர் தமிழ்நாட்டில் விழும்.
ஏப்ரல் 9 முதல் வளி மண்டல சுழற்சி, வெப்பச் சலன மழை வாய்ப்பு ஏற்பட்டு தென் கடலோரம் ஒரு சில இடங்களில் தொடங்கும் மழை ஏப்ரல் 15 க்கு பிறகு எல்லா நாள்களும் வெயில், வெப்பம், புழுக்கம், வியர்வைக்கு பின்னர் மழை வாய்ப்பு.
ஏப்ரல் இறுதி வாரத்திலும் கடும்  வெயிலுக்கு பின்னர் மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே மழை வாய்ப்பு.

மே 1 க்கு மேல் 15 க்குள்  வங்கக்கடலில் வலுவான நிகழ்வு உருவாகும் இது ஒடிசா, மேற்கு வங்கம் பகுதியில் கடக்கும், நெருங்கி வந்தால் தமிழ்நாட்டிற்கு தாழ்வு மழை கிடைக்கும். இல்லாவிட்டால் வெப்பச்சலன மழை  ஆலங்கட்டி மழையாகவும் காற்றுடன் மழையாகவும் ஆங்காங்கே மாலை இரவு அதிகாலை பொழியும்.
நாட்டின் அனைத்து பகுதிக்கும் இந்த ஆண்டு கோடை சராதாரிக்கும் கூடுதல் வெயில் வெப்பம் கொடுக்கும் அதே நேரத்தில் குறைவான பரப்பில் அதிக மழை பொழிந்து ஒதுக்குதல் இருந்து  நல்ல இடி மின்னல் மழை கிடைக்கும்.

தென்மேற்கு பருவமழை:

 மே இறுதியில் வெப்பச்சலன  கோடை மழை தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
 மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.

ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,
மேட்டூர் நிலவரம்:
ஏப்ரல் 4  24'TMC இருப்பு உள்ளது.
ஏப்ரல் 20 இல் 21 TMC யாகவும்,
ஏப்ரல் 30இல் 20 TMC யாகவும்
மே 31 இல் 17 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும் 
ஜூன் 12:இல் 16 TMC யாகவும் குறையும்.
 16 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.
 குடிநீர் தேவை இருக்கும்
ஜூன், ஜூலை அணைகளுக்கு பெரிய நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்காது.
டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog