டெல்டாவிற்கு ஆகஸ்ட் 10,11,12,13 இடிமழை உறுதி. நீர்பிடிப்பு பகுதிகள் எப்படி? திட்டமிட அவசியம்

0

2023 ஆகஸ்ட் 7 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை


புதிய காற்று சுழற்சிகள் வடக்கு வங்கக்கடல் பகுதியில் அதாவது மேற்குவங்கம் வங்கதேசம் இடைப்பட்ட பகுதியில் உருவாகி இமய மலைப் பகுதியை நோக்கிய பயணிக்கிறது.

இதற்குக் காரணம் பசிபிக் பெருங்கடலில் உருவாகி நீடித்துக் கொண்டிருக்க கூடிய புயல் நம்முடைய கடற்பகுதி காற்றை வலுவாக இருப்பதன் காரணமாக வடக்கு வங்கக்கடல் காற்று சுழற்சிக்கு காற்று கிடைக்காமல் தீவிரமடையாமல் உள்ளது.

மேலும் ஒடிசா ஆந்திர பிரதேசம் அருகே நிலை பெறச் செய்ய முடியாமல் வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு தள்ளி இமயமலை நோக்கியே பயணிக்கிறது.


பசிபிக் பெருங்கடல் புயல் தற்பொழுது சீன அருகே ஜப்பான் தைவான் இடைப்பட்ட பகுதியில் நீடிக்கிறது.

இது ஜப்பான் கடந்து வடக்கு நோக்கி பயணித்து
ஆகஸ்ட் 20 தேதி முற்றிலுமாக செயல் எடுக்கும் பிறகு காற்று படிப்படியாக திசை மாறி ஆகஸ்ட் இறுதியில் தென்மேற்கு பருவமழையை ஒடிசா கடலோரம் நிகழ்வு உருவாக்கி தீவிரப்படுத்தும்

ஒடிசா ஆந்திரப் பிரதேச கடலோரம் புதிய நிகழ்வு உருவாவதில் தாமதம் ஏற்படுகிறது.

தற்பொழுது சூரியன் குத்து கதிர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி இருப்பதன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் குத்து கதிர் தமிழ்நாட்டில் விழும் என்பதால் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

ஏப்ரல் மே போல் ஆகஸ்ட் செப்டம்பர் சூரியனின் குத்து கதிர் தமிழ்நாடு இலங்கை நில நடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதி வரை விழும் என்பதால் வெயில் அதிகரித்து காணப்படும்.
வழக்கமாக ஆகஸ்டில் தென்மேற்கு பருவமழை சாரல் கிடைக்கும் என்பதால் தமிழ்நாட்டில் வெப்பம் தெரியாது.

இப்பொழுது தென்மேற்கு பருவமழையை தீவிர படுத்த சரியான செட்டிங் இல்லாத காரணத்தால் சாரல் இல்லை குத்துக் கதிர் காரணமாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

அடுத்து நிகழ்வு உருவானதும் அதாவது ஆகஸ்ட் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு கிடைக்கும்.

ஒரு நிகழ்வு உருவானால் அதன் குணம் அந்த நிகழ்வு செயலிழக்கு முறை நீடிக்கும்.

செப்டம்பர் அக்டோபரில்
ஆந்திர பகுதியில் உருவாக்கி மழை பொழிவை தீவிரப்படுத்தும்.

தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் 25 வரை தீவிரமில்லாமல் இருக்கும் என்பதால் தற்பொழுது இருக்கும் வெப்பத்தை விட ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 25 வரை வெப்பம் மிகுந்து கடும் புழுக்கம் நிலவும்.


ஆகஸ்ட் முதல் வாரத்தில் டெல்டா கடலோரம் வடகடலோரம் ராமநாதபுரம் வடக்கு பகுதிக்கு வடக்கே தொடங்கி திருவள்ளூர் வரை மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மழைக்கு வாய்ப்பு தெரிகிறது


ஆகஸ்ட் 8 வளிமண்டல சுழற்சி உருவாகும் என்பதால் ஆகஸ்டு 10 11 12 13 தேதிகளில் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்கள் மாலை இரவு வெப்பச் சலன இடி மழை பொழிவு சற்று கூடுதல் பரப்பில் கிடைக்கும்.
ஆகஸ்ட் 10 11 12 13 தேதிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் காற்று பகுதி உட்பட மழை இருக்கும் வங்க கடலோரம் அதனை ஒட்டி உள்ள உள் மாவட்டங்கள் கூடுதல் மழைப்பொழிவு பெறும்.

ஆகஸ்ட் 15 க்கு மேல் மழை பொழிவு பரப்பில் சற்று குறைந்து மாலை இரவு இடி மழை பொழிவு இருந்து கொண்டிருக்கும்.


ஆகஸ்ட் இறுதி செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தென்னிந்தியாவிற்கே அதிகம் மழை பொழிவாக அமையும்.

செப்டம்பர் அக்டோபர் கூடுதல் மழை இருக்கும்.

தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20 வரை தொடர வாய்ப்பு உள்ளது.

படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.*


எல் நினோ அச்சம் வேண்டாம்

பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக்என்று பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு  இந்தியப்பெருங்கடல் வெப்பம் உயர்ந்து எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.எல்-நினோ கவலை வேண்டாம்.

ஆகஸ்ட் இறுதி செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் காற்றின் வேகம் குறைந்து இருக்கும் ஒரு சில நாட்கள் அதிகரித்து இருந்தாலும் குறைந்திருக்கும் நாட்களில்
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஆகஸ்ட் இறுதி செப்டம்பர் அக்டோபர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

தற்பொழுது வீசும் தென்மேற்கு வறண்ட காற்று மழை பொழிவை தடுக்கிறது இது உங்களுக்கு குழப்பத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துகிறது. இது போல இந்த ஆண்டு இருக்கும் என்று உங்களை கற்பனையில் ஆழ்த்துகிறது.

நாம் அறிவித்தது போல ஆகஸ்ட் இறுதி செப்டம்பர் அக்டோபரில் தென்னிந்தியாவிற்கு சிறப்பான மழை இருக்கிறது புரிந்து பொறுமையுடன் இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.3
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
வாய்ப்பு தெரிகிறது.


ந. செல்வகுமார்.
7.8.2023-4AM வெளியீடு









Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog