ஜூன் 18,19 பகல் இரவு மழை. ஜூன் 20 முதல் மாலை இரவு கனமழை. உங்களுக்கு எப்படி?

0

ஜூன் 18,19 பகல் இரவு மழை. ஜூன் 20 முதல் மாலை இரவு கனமழை.
உங்களுக்கு எப்படி?
2023ஜூன் 18 ஞாயிறு  அதிகாலை ஆய்வறிக்கை:
ஜூன் 18   வங்கக் கடலின் மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகி
தமிழ்நாடு  நோக்கி வந்து வெப்ப சலன மழை கடலோர மாவட்டங்களில்  பரவலாக கொடுக்கிறது.

இந்த மழை ஜூன் 18 ஞாயிறு ஜூன் 19 திங்கள் இரண்டு நாட்களும் டெல்டா மற்றும் வடகடலோரம் மாவட்டங்களில் பரவலாக தொடர் தூறல் மழையாக சில நேரங்களில் மிதமானது முதல் சற்று கனமழையாக பொழியும்.

ஜூன் 20 செவ்வாய் அதிகாலை வரை இந்த தொடர் மழைக்கு வாய்ப்பு.
இம்மழை ஜூன் 20 செவ்வாய் அதிகாலை வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே பகல் இரவில் எந்த நேரமும் எங்கும் இருக்கலாம்.

கடலோரம்  பரவலாக நல்ல மழை கொடுக்கும்.

ஜூன் 20 செவ்வாய் பகலில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் வானம் தெளிவடைந்து வெப்பம் சற்று அதிகரித்து மேற்கிலிருந்து வெப்பத்தால் காற்றிலேசாக்கி கடலோரம் அனுப்பி.ஜூன் 20 மாலை இரவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள உள் மாவட்டங்கள் கனமழை தெரிகிறது.
அதேபோல் ஜூன் 21 புதன்கிழமை பகலில் வானம் தெளிவாக இருக்கும் மாலை இரவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மாலை இரவில் கனமழைக்கு சாதகம் தெரிகிறது.

இப்படி தினசரி மாலை இரவு கனமழை பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும்.


ஜூன் இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழையை தீவிரப்படுத்தும் வங்க கடல் நிகழ்வு உருவாகும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வெப்ப சலன மழையும்  தொடரும்.
ஜூன் இறுதியில் காற்று பகுதிக்கும் மழை வாய்ப்பு தெரிகிறது.
ஜூலை 15 வரை சீரான மிதமான சற்று கனமான தென்மேற்கு பருவமடைக்கு மட்டுமே வாய்ப்பு.

 டெல்டா உள் பகுதி உட்பட ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை கிடைக்கும்.

காற்றுப் பகுதிகள் உட்பட அனைத்து8 பகுதிகளுக்கும் வறண்ட வானிலையும் உண்டு வானிலை மாறி மழையும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் மாறும் எல்லாம் கலந்து இருக்கும். பி பப்பர் ஜாய் புயல் தற்பொழுது உங்களை குழப்பத்தில் தள்ளி இருக்கிறது. படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை

எல் நினோ அச்சம் வேண்டாம்
பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் என்று பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி3 செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது. எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.ல்-நினோ கவலை வேண்டாம்.
தற்பொழுது வங்கக் கடலில் உருவாகி இருக்கக்கூடிய நிகழ்வு வலுவான மேற்கு காற்ற இருப்பதால் ஜூன் இறுதி வரை பாலக்காடு கணவாய் ஆரியங்காவு கணவாய் 17 கணவாய் வழியாக நுழையும் காற்று வலுவாக இருக்கும்.

ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் காற்றின் வேகம் குறைந்து இருக்கும் ஒரு சில நாட்கள் அதிகரித்து இருந்தாலும் குறைந்திருக்கும் நாட்களில் 
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.
பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

 தற்பொழுது வீசும் தென்மேற்கு வறண்ட காற்று மழை பொழிவை தடுக்கிறது இது உங்களுக்கு குழப்பத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துகிறது. இது போல இந்த ஆண்டு இருக்கும் என்று உங்களை கற்பனையில் ஆழ்த்துகிறது.
நாம் அறிவித்தது போல ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபரில் தென்னிந்தியாவிற்கு சிறப்பான மழை இருக்கிறது புரிந்து பொறுமையுடன் இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
17.6.2023-4AM வெளியீடு

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog