தென் கடலோரம் மழை. வரும் நாள்கள் வானிலை எப்படி?
வணக்கம். செல்வகுமாரின், அதிகாலை ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கும், இரண்டாயிரத்தி இருபத்தி மூன்று, April எட்டு, சனிக்கிழமை, அதிகாலை நிலவரப்பதிவு.
எதிர்பார்த்தது போலவே, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்துல, கடலோரப் பகுதிகள்ல மழை. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின், திருச்செந்தூருக்கு தெற்கே, கன்னியாகுமரியோட, குளச்சல் வரைக்கும், இடைப்பட்ட பகுதியில, மழை மணப்பாடு மற்றும் திசையன்விளை, ராதாபுரம், இந்த பகுதிகள்லயும், நாகர்கோவில் மற்றும் குளத்தில் வரைக்கும் மழை.
இந்த மழைப்பொழிவு, இன்று அதிகாலை, குளித்துறை மற்றும் நாங்குநேரி வரைக்கும் உள்ளே சென்று, அதாவது, தூத்துக்குடி மாவட்டம், கடலோரப் பகுதி, சாத்தான்குளம் பகுதி வரைக்கும் கூட, மழைப்பொழிவுக்கு ஜாதகம் இன்றைக்கு பகல்ல, ஆங்காங்கே, ஆங்காங்கே, தென் மாவட்டத்துல, மழைக்கு ஜாதகம் தெரிகிறது. கண்டிப்பாக, தென் மாவட்ட, மேற்கு தொடர்ச்சி மலையில, ஒரு சில இடங்கள்ல, மழைப்பொழிவு உண்டு.
இப்படித்தான், வரக்கூடிய நாட்கள்ல, தென் மாவட்ட கடலோர பகுதிகள்ல, அதிகாலையிலயும், உள்ளே, தென் மாவட்ட உள்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள்ல, மாலை இரவிலேயும், குறைந்த பரப்பிலும், மழை இருக்கும். இருபதாம் தேதி வரைக்கும், குறைந்த பரப்பு மழை. ஆனால், வெயிலும், புழுக்கம் அதிகரித்திருக்கும். இருபதாம் தேதிக்கு மேல், மழைப்பொழிவும், வெயிலும் அதிகரிக்கும். தொடர்ந்து, வானிலை அறிக்கையுடன், இணைந்திருங்க. அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
ஏப்ரல் மே கோடை மழை
ஏப்ரல் நான்காவது வாரம் மற்றும் மே மாதம் கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.
தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும்.
பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.
பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும்.
செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.
வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 சுஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
ந. செல்வகுமார்.
07.4.2023-4AM வெளியீடு.
TAGS