இன்று முதல் படிப்படியாக அதிகரிக்கும் மழை வரும் பல நாள்கள் மழைக்காலமாகும்.

0

2023 ஏப்ரல் 29 சனிக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை.


ஏப்ரல் இறுதி நாள்கள் மற்றும் மே மாத நான்கு வாரங்கள் கோடை மழை
 நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க க்கடல் குமரிக்கடல் தமிழ்நாட்டின் தென் மாவட்ட மேலடுக்கு பகுதியில் உருவாகியிருக்கக்கூடிய காற்று சுழற்சி காரணமாக தென்மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காற்று குவித்தல் ஏற்படுத்துகிறது. அனைத்து மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் தென்மாவட்டங்களிலும் ஏப்ரல் 28 வரை மழைப்பொழிவு வலுத்திருந்தது.

ஏப்ரல் 29
காற்று சுழற்சி, நில நடுக்கோட்டு வெப்ப நீராவி குவிதல்  மற்றும் உயரழுத்த காற்று இணைவு காரணமாக டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் காலை 10 மணிக்கு மேல் மதியம்  ஆங்காங்கே ஆங்காங்கே  மாலைக்குள் மழை பொழிவு ஒதுக்கி ஒதுக்கி இருக்கும்.
மதியம் மாலை இரவு தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் கூடுதல் பரப்பில் ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழியும்.
கர்நாடகா எல்லை ஓர மாவட்டங்களுக்கும் வாய்ப்பு.

ஏப்ரல் 30 முதல் மே 12 முடிய
மே 1 முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும்.
பல நாள்கள்  பரவலாக மழை இருக்கும்.
வட கடலோரம்  புதிய காற்று சுழற்சி காரணமாக கூடுதல் பரப்பில் சற்று பரவலான மழை பொழிவு இருக்கும்.
 மே 1 முதல் மழை பொழிவு  பரப்பில் கூடி காணப்படும்.
எல்லாம் ஒதுக்கி ஒதுக்கி கூடுதல் பரப்பில் ஆங்காங்கே வெவ்வேறு மணிநேரங்களில் பொழியும்.

மே 8 தேதிக்கு மேல் நில நடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் உருவாகும் வலுவான நிகழ்வு வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்து அரபிக்கடல் காற்றை ஈர்த்தும் கனமழை பதிவை சற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மே 13 க்கு மேல் புயலாகி விலகி போகும் போது மேற்கு காற்றால் கடலோர வெப்பம் உயரும். வெப்பச்சலன மழை தொடரும்.

 மே மாத இறுதி நாட்களில் அமைந்தால் அது அரபிக் கடலில் அமையும்.
அதனால் பருவ மழை தொடங்கும்.

எல் நினோ அச்சம் வேண்டாம்
பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது. எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.
எல்-நினோ கவலை வேண்டாம்.
தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா 6?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள்  பருவமழை தொடங்கிவிடும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.
பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை  இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை  முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.
வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு  இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.


ந. செல்வகுமார்.
29.4.2023-4AM வெளியீடு.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog